என் மனதோடு மீண்டும் கை குலுக்க வந்த இனிய நெஞ்சங்களுக்கு ஜாம்புவானோடை சத்திய மூர்த்தியின் வணக்கங்கள். சிங்கைக்கு வந்து 16 ஆண்டுகளில் சந்தித்த நல்ல நண்பர்களில் முக்கியமானவர்கள் இரண்டு ரமேஷ்கள். ஒருவர் நவநீதம் ரமேஷ் மற்றொருவர் தியாக ரமேஷ். இருவரில் இவ்வாரம் தியாக ரமேஷ் பற்றி சிலவற்றை உங்களுடன் பகிர்வதிலும் பகர்வதிலும் ஒரு திருப்தி. இவர் தமிழ் நிகழ்வுகளில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனவர், நெடிய ஆனால் இனிய உருவம் என்றும் நெற்றியில் ஒரு சிறிய சந்தனபொட்டு பணிமுடிந்து வீட்டுக்கு செல்லாமல் நேராக நிகழ்வுக்கு வந்ததை சொல்லாமல் சொல்லும் தோள் பை.பார்த்தவுடன் வணக்கம் அண்ணா என்று நம்மையும் அறிஞர் போல் எண்ணி காட்டும் நேசமும் சிநேகமும் கலந்த சிநேக புன்னகை உரையாடும் போது தன் குடும்ப உறுப்பினர்களைப்பற்றி கூறி உறவாடும் நேசம் நிகழ்ச்சிகளில் நடக்கும் காட்சிகளை தன் மெல்லிய DIGICAM ல் பதிவாக்கி இணைப்புறையோடு படமாக்கி மறுநாளே உலகெங்குமுள்ள இணைய நண்பர்களுக்கு கண்களுக்கு விருந்தாக்கும் வேகம் அதற்க்கும் மேலாக அவற்றை ஊடகங்களுக்கு அவை கேட்காமலேயே அனுப்பி வைத்து நெகிழ்வுறும் மகிழ்வு விழாக்கள் முடிந்து செல்லும்போது பிரிய மனமின்றி இன்னும் ஒரு வாரம் சந்திக்க முடியாது என்று கூறி பாசிர் ரிஸ் MRT ல் அனுப்பிவிட்டு பூன்லே போகும் குழந்தைமனம் இடைப்பட்ட ஆறு நாட்களுக்குள் அவரின் இணைய நண்பர்கள் அனுப்பும் சுவை தகவல்கள் ஆரோக்கிய குறிப்புகள் அனைத்தையும் எனக்கு அனுப்பி வைக்கும் பரிவு என்று எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. அத்தகு இனிய நட்புத்தம்பி பெயரில் உள்ளதைப்போலவே மனதாலும் தியாக சிந்தை உள்ள தியாக ரமேஷ் இன்று எனக்கு அனுப்பியுள்ள மனதைதொட்ட வரிகளை உரிமையோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி
நன்றியுடன் பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும் - ஸ்காட்லாந்து பொன்மொழி
ந,வீ,சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment