Saturday, February 12, 2011

....எண்ணங்கள்

கண்ணதாசன் பதில்கள்: என் குரு யார்?
2
கே: கவிதைகளின் இடையிலே பிறமொழிச் சொற்கள் கலந்து கவி புனைவது சரியா? அது நம் மொழி வளத்தைக் குறைக்காதா?

பதில்: வழக்குச் சொற்களைத் தள்ளிவிடுவதால்தான் மொழி வளம் குறைகிறது. உலகத்தை ஆங்கிலம் ஆக்கிரமித்துக்கொண்டது, வட்டாடர வழக்குகளை ஏற்றுக்கொண்டதாலேயே.


கே: 'கண்ணதாசன்' இதழில் 'அரிதாரமே இறைவன் படைத்த உண்மை. அழகாக முடியுமானால், நடிகன் நாட்டுத் தலைவனாவதும் நடக்கக்கூடியதே' என்று எழுதியிருந்தீர்களே? நடிகர்களான எம்.ஜி. எம்.ஜி.ஆரும், ரீகனும் நாட்டுத் தலைவர்களாகி நாடாளுகிரார்களே...உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டீர்களா?


பதில்:உண்மைதான். காலத்தால் எவ்வள்ளவோ கருத்துக்கள் மாறி விடுகின்றன. அனுபவங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது மடத்தனம். அனுபவம் என் கருத்தைப் பொய்யாக்கிவிட்டது என்பதைக் கூச்சமில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.


கே : நீங்கள் குறுகிய நேரத்தில் எழுதிய பாடல் எது?
பதில்: 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் வரும் 'முத்தான முத்தல்லவோ '

கே: அரசன் அன்று கொள்வான், அதனால் பிரச்சனை முடிந்துவிடும். ஆனால் தெய்வம் நின்று கொல்லும். அதனால் பிரச்சனை பெரிதாக உருவாகிவிடுமல்லவா?
பதில்: பிரச்சனை எவ்வளவு பெரிதாகிறதோ, அவ்வளவுக்கு அழிவும் பெரிதாக இருக்கும்.சந்தேகமே இல்லை. நோயை முற்ற விட்டு அறுப்பதும், மருத்துவத்தில் ஒரு சரியான பகுதியாகும். பிறகு அந்த 'நோய்' வரவே வராது.

கே: பெண் - கவிதை இரண்டையும் ஒப்பிடுங்கள்?

பதில்: பெண் எப்போதும் அனுபவிக்கத் தக்கவள். கவிதை ஓய்விருக்கும் போது மட்டுமே.

கே: 'காமதாசன்' என்ற பட்டப்பெயரை உங்களுக்கு வழங்கலாம் என்றிருக்கிறேன். ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்: இடையில் 'ராஜ' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'காமம்' என்றால் அன்பும் என்றொரு பொருளும் உண்டு.

கே: பிறர் இயற்றிய பாடல்களில் உங்களைக் கவர்ந்த பாடல்?
பதில்: சகுந்தலையில் வரும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடலான 'சொல்லு குழாந்தாய்' என்ற பாடல்.

கே: இவ்வளவு காலம் அரசியலில் மாட்டித் தவித்தீர்கள். இரண்டு வரிகளில் அந்த அனுபவத்தை படம் பிடியுங்களேன்?
பதில் : அரசியல் எனது உருவத்தை சிதைத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் என் சுயசரிதையின் பக்கங்களை அதிகரித்திருக்கிறது.

கே: கவிஞன் வாக்கு பொய்க்காது என்னும் கூற்று பற்றித் தங்கள் கருத்து யாது? தங்கள் வாக்கு எத்தன்மையது?
பதில்: மனப்பூர்வமாக, லாபம் கருதாது, தோன்றுகின்ற உணர்ச்சியை அப்படியே வடித்து வைக்கும் யாருடைய நேர்மையான வாக்கும் பொய்க்கவே பொய்க்காது.

கே: தங்களின் குரு யார்?
பதில்: நான் செய்த முட்டாள்தனமே!

1 comment:

  1. வருக வருக ... வலைத்தளம் உங்களை வரவேற்கிறது.

    ReplyDelete